திங்கள், 26 ஏப்ரல், 2010

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை



உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றி

உலகின் முதலாவது முழு முகமாற்று அறுவை சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக ஸ்பெய்ன் மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.
ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த 30 சத்திர சிகிச்சை நிபுணர்களினால் இந்த விசேட சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழுவதுமாக சிதைவடைந்த முகமொன்றுக்கு பதிலாக மற்றுமொரு நபரின் முகமொன்றின் பாகங்கள் பொருத்தி இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் முழுவதுமாக குறித்த நபரின் முகம் சிதைவடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாடை, மூக்கு, முகத் தோல், உதடுகள் மற்றும் பற்கள் உள்ளிட்ட பூரண முகப் பகுதியும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
முகமாற்று அறுவைச் சிகிச்சை 22 மணித்தியாலங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முன்னர் பத்து முகமாற்று அறுவைச் சிகிச்சைகள் உலகில் இடம்பெற்ற போதிலும், இந்த அளவிற்கு மிகவும் சிக்கல் மிகுந்த முழு முகமாற்று அறுவை சிகிச்சையொன்று இதுவரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், தற்போதே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டினால் குறித்த நபர் காயமடைந்ததாகவும் இதற்கு முன்னர் ஒன்பது தடவைகள் நடத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
சுவாசித்தல், உணவு உண்ணல், பேசுதல் போன்ற பல்வேறு அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது குறித்த நபர் அவதியுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்களுக்காக ஒரு எடிட்டர்


நீங்கள் html , கற்றுக்கொள்ள இதோ உங்களுக்கு html எடிட்டர் .
எல்லா டாக்சும்  இதில் உள்ளன தேவையானதை மட்டும்  நீங்கள்
சேர்த்து கொள்ளலாம். அதில் preview , உள்ளது. உங்கள் பக்கம் எப்படி
இருக்கும் என்பதை அங்கே பார்த்து கொள்ளலாம்.சேமித்தும் வைக்கலாம் .
http://www.tripod.lycos.com/
இங்கு மெம்பெர் ஆக வேண்டும், control panel , டாப் கிளிக் செய்து html ,எடிட்டர் தேர்வு
செய்து http://build.tripod.lycos.com/hpstudio/freeformeditor/freeformeditor.jsp இங்கு சென்று
நீங்கள் பழகி கொள்ளலாம்.!

வியாழன், 22 ஏப்ரல், 2010

சிறுநீரகம்








சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே 


கண்டறிவது எப்படி?



நம் நாட்டில்  நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான 

சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. 

சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது 

கட்டுப்படுத்துவதும் மிக எளிது. 



1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது? 

சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று 

சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 

70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் 

கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக 

ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக 

களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு 

ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது 

செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.

2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா?
திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற 

காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப 

நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் 

சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் 

இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் 

கழித்தல்.

உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய 

பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி 

செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் 

அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.

3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா?

அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு 

முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் 

காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது 

இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.

ஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு 

காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் 

ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

அதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி 

சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் 

இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே 

சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

இதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் 

இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் 

(ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் 

சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் 

கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி 

சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் 

சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 

சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.

4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா? 
மேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த 

கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு 

உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.

(சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான 

பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)

5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும். 
வெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் 

போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு 

(சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு 

பரிசோதனை தேவைப்படலாம்.

இந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் 

கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ 

அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் 

உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய 

மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் 

செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் 

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில 

பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.

6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன?

சிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.

1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், 

சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.

2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). 

இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக 

அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், 

தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் 

(உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் 

சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.

3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த 

சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் 

மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் 

இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் 

ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் 

சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் 

டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த 

நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான 

சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். 

டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் 

கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் 

டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் 

கொள்ளலாம்.

4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 

சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் 

பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் 

பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக 

மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு 

கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய 

காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் 

முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக 

மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி 

செய்யலாம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் !




செவ்வாய், 20 ஏப்ரல், 2010

நலம் நலமறிய ஆவல்



நலமாக இருக்க பிராத்திப்போம் வாங்க !
இந்த புதிய பகுதி நம் அனைவர்க்கும் ஏற்றதாக இருக்கும் .
அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் , நலம் பெற வேண்டும் என்று
"நலம் நலமறிய ஆவல்" என்ற புதிய நிகழ்ச்சி இந்த நியூஸ் ப்ளோகில்
பிரதி சனி கிழமை மாலை தோறும் அனைவர்க்கும் பயன் பெரும் வகையில்
வெளி  இட நினைக்கிறன்.  நலம் பெற வேண்டும் என்று உண்மையில் 
நினைபவர்கள் கருத்து பகுதியில் உங்கள் பெயர் ,ஊர் , உங்கள்
உபாதைகள் மற்றும் பிணி பற்றி சுருக்கமாக தெரிவிக்கும் படி
கேட்டுக் கொள்கிறேன் .ஞாயிறு தோறும் காலை 4-5  மணிக்கு
நாம் அனைவரும் ஒன்றாக இவர்களுக்காக பிராத்திப்போம் !
இவாகள் விரைவில் நலமுடன் குணமாக கூட்டு பிராத்தினை செய்வோம்.
நமக்காக மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்காக நாம் செய்யும் சின்ன தொண்டு.
அனைவரும் ஆதரவு தந்து உங்கள் பொன்னான கருத்துகளை தவறாமல் சொல்லுங்க.

வியாழன், 15 ஏப்ரல், 2010

ஸ்கேனர்



வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் : இந்தியர் சாதனை

புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.
ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.
அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (N.E.H.U) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.
கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.
'இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 10 ஏப்ரல், 2010

News



இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

இந்தியாவிலேயே முதல் முறையாக வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சென்னையில் நடந்துள்ளது. ஒருவரின் கல்லீரலைப் பெற்று அதை இரண்டாகப் பிரித்து இருவருக்குப் பொருத்தி டாக்டர் முகம்மது ரெலா என்ற டாக்டர் பெரும் சாதனை செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் தலைவராக இருப்பவர் டாக்டர் ரெலா. இந்த மருத்துவமனை சென்னை மற்றும் பெங்களூரிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.
சாதனை அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் ரெலா கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு கல்லீரலை இரண்டாகப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். உறுப்பு தானம் செய்தவரின் உடலிலிருந்து இந்த கல்லீரல் பெறப்பட்டது.
உலகம் முழுவதும் கல்லீரல் தானமாக கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. எனவே கிடைத்த கல்லீரலை அதிகபட்சம் பேருக்குப் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. அதேசமயம், இந்தியாவில் இவ்வாறு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒரு கல்லீரலைப் பிரித்து இருவருக்குப் பொருத்துவது நோயாளிகளுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையும் என்றார் டாக்டர் ரெலா.
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை யில் டாக்டர் ரெலா இதுபோன்ற அறுவைச் சிகிச்சையை செய்துள்ளாராம். இந்த தொழில்நுட்பம் ஐரோப்பாவில் உருவானது. கிங்ஸ் மருத்துவமனையில் டாக்டர் ரெலாதான் முதல் முறையாக இதை செய்து அறிமுகப்படுத்தினாராம்.
சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் கல்லீரலைத் தானமாக பெற்று அதைப் பிரித்து இரு நோயாளிகளுக்குப் பொருத்தியுள்ளார் டாக்டர் ரெலா.
தானமாக பெறப்பட்ட கல்லீரலை இரு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதில் சிறிய இடதுபுறப் பகுதியை இளம் பெண் ஒருவருக்கும், பொரிய பகுதியை வயதான பெண்மணிக்கும் பொருத்தியுள்ளனர்.
கல்லீரல் பொருத்தப்பட்ட இளம் பெண் , கிரிக்லர் நஜர் சின்ட்ரோம் என்ற அரிய பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இதுபோன்ற பிரச்சினை இருந்தால் பிறக்கும்போதே, மஞ்சள் காமாலை நோய் வரும். இந்தப் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவ நேரிடும் என்றார் டாக்டர் ரெலா.

ஏவிஜி ரெஸ்க்யூ



கம்ப்யூட்டர் ஒரு டிஜிட்டல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. சரி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற கதையாக இதோ இன்னும் ஒரு காப்பாற்றும் சிடி தயார் செய்திடும் தகவலை இங்கு தருகிறேன்.

இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி. ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.

இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டாக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம், வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களால் பாதித்த கம்ப்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி. ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம்.

இந்த ரெஸ்க்யூ சிடி என்பது லினக்ஸ் மூலம் வழங்கப்படும் இலவச போர்ட்டபிள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். உங்களுடைய சிஸ்டம் பொதுவான வழிகளில் பூட் ஆகாத போது, இந்த சிடியைக் கொண்டு பூட் செய்திடலாம். அத்துடன் வைரஸ் பாதித்த கம்ப்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல்பாடுகளையும் இது தருகிறது.
இரண்டு பேனல்களில் பைல் மேனேஜர் வசதி,எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வொர்க் (சர்வர், டொமைன், ஐபி முகவரி போன்றவை)வசதிகளைக் கண்டறியும் வசதி,

இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்கலிலும் செயல்படும்.

வியாழன், 8 ஏப்ரல், 2010





செவ்வாய், 6 ஏப்ரல், 2010

புறா
சமாதன சின்னமாக புறாவை தூது அனுப்புவோம் !
இந்த அறிய வகை புறாக்களை பாருங்கள்..
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket
Photobucket

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

song


Annoying Orange 2: Plumpkin - The funniest movie is here. Find it

சனி, 3 ஏப்ரல், 2010

rare collections.

வியாழன், 1 ஏப்ரல், 2010

வாழ்க்கை தத்துவம்



நாம் வாழும் வாழ்க்கை எத்தனை உன்னதமானது ! 

நாம்  அறிய  வேண்டிய  விஷயம்  எத்தனை  உள்ளது.......

நம் வாழ்க்கை  பாடத்தை  காண்போம் வாங்க...............

இத click  பண்ணாவிட்டால்   நீங்க நிறைய  மிஸ் பன்னுவீங்க.!






   

page

An adventure called CaratLane