ஞாயிறு, 20 ஜூன், 2010

ரோபோ


அறுவை ‌சி‌கி‌ச்சை‌‌யி‌‌ல் ரோபோ ‌சில‌ந்‌தி

சவாலான அறுவை ‌சி‌கி‌ச்சைக‌ளி‌ல் பய‌ன்படு‌‌ம் புதுமையான நானோ ரோபோ த‌ற்போது வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. ‌சில‌ந்‌தி வடி‌வி‌ல் இ‌ந்த ரோபோ உ‌ள்ளது.
ம‌னித‌னி‌ன் தலைமுடி தடிமனை ‌விட ஒரு ல‌ட்ச‌ம் மட‌ங்கு ‌சி‌றியது இ‌ந்த ரோபோ ‌சில‌ந்‌தியாகு‌ம்.
கொல‌ம்‌பியா ப‌ல்கலை‌க்கழக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் ‌சில‌ந்‌தி ரோபோவை உருவா‌க்‌கியு‌ள்ளன‌ர். உட‌லி‌ன் ஒ‌வ்வொரு செ‌ல்‌லிலு‌ம் இர‌ட்டை‌ச் சுரு‌ள் ஏ‌ணி வடிவ‌ம் கொ‌ண்ட ஆ‌ர்.எ‌ன்.ஏ. மூல‌க்கூறுக‌ள் இரு‌க்‌கிறது.
நோ‌ய் ஏ‌ற்படு‌ம் போது ஆ‌ர்.எ‌ன்.ஏ.‌க்க‌ளி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌ம். இ‌ந்த நானோ ரோபோவா‌னது ஆ‌ர்,எ‌ன்,ஏ.‌வி‌ன் ஏ‌ணி‌ச் சுரு‌ளி‌ல் இணை‌க்க‌ப்ப‌ட்டு அனு‌ப்பு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
நோயா‌‌ல் ‌‌பிளவுபடு‌ம் டி.எ‌ன்.ஏ. ஏ‌ணி‌ச்சுரு‌ளி‌ல் இணை‌ப்பு ஏ‌ற்படு‌த்து‌ம் வேலையை இ‌ந்த ரோபோ செ‌ய்யு‌ம். ஆனா‌ல் இ‌ந்த ரோபோவா‌ல் ஏ‌ணி‌ச் சுருளை து‌ண்டு செ‌ய்ய முடியாது. அதே நேர‌த்‌தி‌ல் நோ‌ய்‌த் தொ‌ற்று செ‌ல்களை அ‌ழி‌க்க இதை‌ப் பய‌ன்படு‌த்த முடியு‌ம்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

கடலுக்குள்.........


கடலுக்குள் ஆய்வு நிலையம்!

நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.
நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது. ஆனால் செவ்வாய் கிரகத்திலோ ஈர்ப்பு விசை 8-ல் முன்று பங்காக இருக்கிறது. இதுதவிர சூரிய ஔ பற்றாக்குறை, தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு போன்றவையும் காணப்படுகிறது.
எனவே செவ்வாய் பயணம், நிலவுப் பயணத்தைவிட சவாலானது. இதை எதிர்கொள்ளும் விதமாக செவ்வாய்க்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பல்வேறுவித ஆய்வு, ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றில் ஒரு சில சோதனைகள் முடிந்துவிட்டன.
அடுத்தகட்ட சோதனையாக விண்வெளி வீரர்களை கடலுக்கு அடியில் அழைத்துச் சென்று ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக கடலில் 65 அடி ஆழத்தில் புளோரிடா மாகாணத்தில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நாசாவின் இந்த திட்டம் நீமோ (NEEMO – நாசா எக்ஸ்டிரிம் என்விரான்மென்ட் மிஷன் ஆபரேஷன்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.
சவால் நிறைந்த, சிக்கலான சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சிகள் இதன் முலம் அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அஸ்ட்ராநட்ஸ் (Astronauts) என்று அழைப்பதுபோல கடலுக்குள் தங்கி இருந்து ஆய்வு நடத்தும் வீரர்களை அக்வாநட்ஸ் (Aquanauts) என்று அழைக்கிறார்கள்.
இந்த சோதனையில் அனுபவம்மிக்க 2 விண்வெளி வீரர்கள் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொள்கிறார்கள். 2 வார ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற செயற்கை சூழ்நிலையில் ஸ்பேஸ்வாக் செய்வது, எந்திரங்களை இயக்குவது போன்ற பணிகளை வீரர்கள் செய்கிறார்கள். இந்த முன்கட்ட ஆய்வு, விண்வெளி வீரர்களின் உடல்தகுதியை அதிகப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

திங்கள், 7 ஜூன், 2010

இருபது வருடங்கள் கழித்து...



நீங்கள் இருபது,முப்பது வருடங்கள் கழித்து எப்படி இருப்பீர்கள் ?


பார்க்க ஆசையா? 


உங்கள் போடோவை upload செய்து இருபது வருடங்கள் 


கழித்து நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று பாருங்கள்!!! 
please go!!!

செவ்வாய், 1 ஜூன், 2010

நிலவுக்கு ரோபோ ..




நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்

13 1/2 கோடி பரிசு அறிவிப்பு மனிதன் நிலவில் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு எத்தனையோ விண்வெளி ஓடங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
தற்போது ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ஒரு ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான ரோபோ தயாராகிவிட்டது. காஸ்டல்டிபெல்ஸ் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி பள்ளி மாணவர்கள் குழு இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது.
`பிக்கோ ரோவர்’ என்பது இந்த ரோபோவின் பெயராகும். இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இருக்கும்.
இந்த ரோபோவானது கோளவடிவில் இருந்தாலும் பூமிபோல 33 டிகிரி சாய்வாக இருக்கும். இதன் மேல் அரைக்கோளத்தில் இருக்கும் கேமரா சுழன்று படம் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்பாகமும், சக்கரங்களும் ரோபோ எடையை சமநிலைப்படுத்தும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பி வைக்கும். இந்த ரோபோ எப்போது நிலவுக்கு கிளம்புகிறது என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதற்கு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? 131/2 கோடி ருபாய்.
ரோபோ நிலவுக்குச் சென்று வெற்றிகரமாக செயல்பட்டு அது அனுப்பும் புகைப்படம் மற்றும் தகவல்கள் பூமிக்கு கிடைத்துவிட்டால் பரிசுத்தொகை மாணவர் குழுவுக்கு வழங்கப்படும். `கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ்’ என்று இந்த பரிசுத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அரசுசாரா அமைப்பும் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

page

An adventure called CaratLane