வியாழன், 3 மே, 2012

What to study Where | என்ன படிக்கலாம்...எங்கே படிக்கலாம் ., Dinamalar

What to study Where | என்ன படிக்கலாம்...எங்கே படிக்கலாம் ., Dinamalar

"The only place success comes before work is in the dictionary."

புதன், 11 ஏப்ரல், 2012

லேடீஸ் ஸ்பெஷல் சித்திரை மாத சிறப்பு இதழ்


இந்த  மாதம்  லேடீஸ் ஸ்பெஷல் சித்திரை  மாத சிறப்பு இதழ்  

எங் லேடீஸ் விங் புதிதாக இந்த இதழில் துவக்கப்பட்டுள்ளது  ., 
பதினெட்டு வயது முதல் முப்பத்தி ஐந்து வரை உள்ள பெண்கள் 
தங்கள் திறமைகள் மற்றும் சாதனைகள் பகிர்ந்து கொள்ள வாருங்கள்.
இணைத்து கொள்ள இங்கே கிளிக் பண்ணுங்க click here!
மேலும் குழந்தைகளை இந்த விடுமுறையை சமாளிக்க சூப் பர் ஐடியா க்கள்.
இந்த இதழில் ........மறக்காமல் வாங்கி படியுங்கள் அனைவரும்.!!!

மற்றும் இந்த சித்திரை கனியை வரவேற்க மகாலட்சுமி அலங்கார தட்டு 
செய்ய உடனே புத்தகத்தை பாருங்கள்.

உங்க வீட் டு குட் டீஸ் வெயிலில் அலையாமல் வீட்டில் உட்கார்ந்து , முப்பது 
நாட்கள் முப்பது வகையான அலங்கார தட்டு எளிய முறையில் செய்ய 
லேடீஸ் ஸ்பெஷல் சித்திரை சிறப்பிதழ் வாங்குங்க . மகிழுங்க.

ஞாயிறு, 25 மார்ச், 2012

திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம் Dinamalar

New laws enroute to facilitate women more on property rights | திருமணத்திற்குப் பிறகு வாங்கும் சொத்தில் மனைவிக்கு பங்கு: வருகிறது புது சட்டம் Dinamalar

வெள்ளி, 9 மார்ச், 2012

மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம்


மேலும் வெவ்வேறு நாளிதழின் தலைப்பு செய்தி காண இங்கே செல்லு ங்கள் 

click here to view! 
திண்டுக்கல் : மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க, 20 காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மனவளர்ச்சி குன்றியோருக்கு மனவளர்ச்சி குன்றிய 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரத்தில் பயிற்சியுடன் கூடிய காப்பகம் துவக்கப்பட உள்ளது. இதே போல, 14 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு சென்னை, சேலம், ஈரோடு, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சாவூரில் காப்பகங்கள் துவக்கப்பட உள்ளன. திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியாக, ஒரு கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்படும்.


நன்றி   தினமலர் !




செவ்வாய், 21 பிப்ரவரி, 2012


சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
முனைவர். க. மணி

இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக்கூடியது என்று சொல்வதுண்டு. மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படியிருக்க ஜப்பானியர்கள் "யுமாமி" என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை.

Tasteஇனிப்புச் சுவையுடைய சக்கரைப் பொருள்கள் உடலும் மூளையும் தொடர்ந்து வேலை செய்வதற்குத் தேவையான எரிசக்தியை வழங்குகின்றன. உப்புச்சுவை இரத்தத்திற்கு வேண்டிய "எலெக்ட்ரோலைட்" எனப்படும் உலோக அயனிகளை வழங்குகிறது. இரத்தத்தில் உப்பு அளவு குறைந்தால் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். சேவரி அல்லது யுமாமி என்று அழைக்கப்படும் மாமிசச் சுவை (தமிழில் இதற்கு இணையான சொல் இல்லை) உடலுக்கு உரம் தரும் புரதத்தை வழங்கும் பொருள்களுக்குச் சொந்தமானது. எனவே இனிப்பு, உவர்ப்பு, சேவரி (சைவ உணவுப் பழக்கமுடையவர்களுக்கு பருப்பிலிருந்து அந்தச் சுவை கிடைக்கிறது) ஆகிய மூன்றையும் நாம் விரும்பிச் செல்கிறோம்.

மனிதன் வேட்டைக்காரனாக வாழ்ந்த காலத்தில் இம்மூன்று சுவைகளையும் நாடி ஒடித் திரிந்ததில் ஒரு காரணமிருக்கிறது. அன்று அவனுக்கு கரும்பாலையோ, உப்பளங்களோ, பிராய்லர் கோழிக்கடைகளோ கிடையாது. உடம்பில் உயிர் தரித்திருக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்று சுவைகளும் அவனுக்கு முக்கியம். இன்றும் அதே மூன்று சுவைகள் நம்மை ஆட்டிப் படைப்பதால் அளவின்றி அவற்றைப் புசித்து சக்கரைநோய், மனப்பதற்றம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் துன்புறுகிறோம்.

ஐஸ்கிரீம் வேண்டும் ஆனால் அதில் சக்கரையிருக்கக் கூடாது, ஊறுகாயில் உப்பு உறைக்க வேண்டும் ஆனால் அதில் உப்பு இருக்கக்கூடாது, மாமிசச் சுவைவேண்டும் ஆனால் சைவமாக இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. இது சாத்தியமா?

நாம் நாக்குக்கு அடிமைதான். அதிலிருந்து நம்மால் விடுபட முடியாது. நாக்கின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது. துளி சக்கரை போட்டாலும் அது இரண்டு கரண்டி சக்கரையின் இனிப்பைத் தரவேண்டும்; சிட்டிகை உப்பிலிருந்து கால்கரண்டி உப்பின் கரிப்பு கிடைக்க வேண்டும்; மாமிசமே இல்லாமல் மாமிச சுவையை ஏதாவது தரவேண்டும். இப்படி ஒரு தந்திரம் கிடைத்து விட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், எடை கூடுவது போன்ற பிரச்சனையில்லாமல் நாம் இஷ்டம்போல சாப்பிடலாம். எப்படி சக்கரைக்கு அதிகமாக இனிப்பைத் தருவது? உப்புக்கு எப்படி அதிக உவர்ப்பைத்தருவது, மாமிசத்திற்கு எப்படி திகட்டும் அளவுக்கு அதிக சுவையூட்டுவது.. ?

மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உப்பினை இப்போது பிரியாணி போன்ற புலால் சமையல்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். அஜினோமோட்டோ என்றால் உங்களுக்கு உடனே தெரியும். அஜினோமோட்டடோ தரும் சுவையைத்தான் சேவரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அஜினோமோட்டோ மாமிசச் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோல சக்கரையின் இனிப்பை தூக்கலாக்க ஒரு பொருள் இருந்தால் இரண்டு கரண்டி சக்கரை போடுமிடத்தில் அரைக் கரண்டி அல்லது அதற்கும் குறைவை போட்டுச் சமாளிக்கலாம்.

சேக்கரைன், அஸ்பார்ட்டேம் போன்றவை செயற்கையாக இனிப்பைத் தருபவை. அவை பொய்யானவை. அவை தரும் இனிப்பு சக்கரைபோல இருப்பதில்லை, இதனால்தான் சக்கரை நோய்க்காரர்கள் வேண்டா வெறுப்பாக செயற்கை இனிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

சுவை மொட்டுகள் 

பள்ளிக்கூடப் புத்தகங்களில், நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளை கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள். அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாக்கில் சுவைகளுக்கான மேப் எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 Charles Zuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லா இடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார். நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அவற்றை சுவை அரும்புகள் அல்லது சுவை மொட்டுகள். ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் ஆறு அல்ல 25 வகை சுவைகளை அறிகிறோம்.
Taste
ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் செல்கள் உண்டு. அதாவது ஒரு செல் ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலை மூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதி ஒரு சுவையை மட்டும் அறியும் என்பதுதான் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் 25 வகை சுவைகளை அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில் சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன. இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று 25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். சாடிக்கு ஏற்ற மூடி போல புரதமும் அதன் சுவை மூலக்கூறும் ஒன்றுடன் ஒன்று டக் கென்று பொருந்திக்கொள்கின்றன. பூட்டும் சாவியும், காலும் செருப்பும் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார். அதனடிப்படையில் நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றை நாம் தொகுத்து ஆறு அல்லது ஐந்து சுவை வகைகளாகப் பிரித்துக்கொள்கிறோம். உண்மையில் கன்னல், தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா ஆகியவை அனைத்தும் இனித்தாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அல்லவா இருக்கின்றன.

இந்தக் கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு வந்துவிட்டோம். ஸூக்கர் சுவை ஏற்பி மூலக்கூறுகளை கூர்ந்து ஆராய்ந்தபோது ஒவ்வொன்றின் கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் இருப்பதைப் பார்த்தார். ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அருகே உள்ள இன்னொரு சிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும் மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான்.

இதன்படி பார்த்தால், இயற்கையில் சுவைகளைக் கூட்டுவதற்கென்றே பல பொருள்கள் இருக்கும்போலத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஏன் சுவை உணரும் ஏற்பிகளில் இரட்டை அறை அமைப்பு இருக்கவேண்டும்?

மேலும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறையில் அமரக்கூடிய சுவைத்தூண்டிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். சக்கரை முதலான பொருள்களின் சுவைகளை பலமடங்காக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் முயன்றால் கசப்பின் வீச்சையும் தணிக்கலாம். அதன்பிறகு எல்லோர் வீட்டிலும் மாதம் 5 கிலோ சக்கரைக்கு பதிலாக கால் கிலோதான் வாங்குவார்கள். துளி உப்பு போதும் என்று திருப்தியடைவார்கள். கசப்பையும் வெறுக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் மனிதன் உணவினால் கெட்டுப்போகாமல் வாழ்நாள் (சிறிதனாலும்) நோயின்றி வாழ்வான்.

நன்றி: சைன்டிஃபிக் அமெரிக்கன்.

முனைவர். க. மணி (kmani52@gmail.com)
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்


சனி, 11 பிப்ரவரி, 2012

லேடீஸ் ஸ்பெஷல்

லேடீஸ் ஸ்பெஷல் படிக்கலாம் வாங்க!!!!!
சாதிக்க துடிக்கும் சகோதரிகளுக்கு ...
பெண்கள் மாத இதழ் !!! இந்த மாதம் படிச்சுடீங்களா?
இங்கு சென்று மெம்பெர் ஷிப் கணக்கு ப்ரீ ஆக உருவாக்கி கொள்ளுங்கள்,
ரெஜிஸ்டர் செய்தவர்கள் மட்டுமே ஈ  புத்தகத்தை முழுவதுமாக 
படிக்கலாம். நிறைய மாத/வார இதழ்கள் மூலமாக சில டாபிக் மட்டும் 
ஆண் லைன் ல் படிக்கலாம்.. முழவதையும் படிக்க subscribe 
செய்தால் மட்டுமே முழுவதையும் படிக்க முடியும்..(பணம் கட்ட வேண்டும்)

லேடீஸ் ஸ்பெஷல் முற்றிலும் இலவசமாக .,டவுன்லோட் செய்யாமல் .,அப்படியே படிக்கலாம்.!

நன்றி லேடீஸ் ஸ்பெஷல்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

சூர்ய சக்தியில் ஓடும் சைக்கிள்




காரைக்குடி: சூரிய சக்தி மூலம் (சோலார் எனர்ஜி) இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் பூபதிராஜ், 49, கண்டுபிடித்துள்ளார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர், கடந்த 20 ஆண்டுகளாக 125 க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை உருவாக்கியுள்ளார். இவரது கண்டுபிடிப்புகளில் அலராம் சூட்கேஸ், நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது, திரவம் காலியானால் எச்சரிக்கும் ஐ.வி., மானிட்டர் கருவி போன்றவை முக்கியமானவை. தற்போது, சூரிய சக்தி,பேட்டரி மற்றும் "பெடல்' மூலம் இயங்க கூடிய சைக்கிள் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

இரவு நேரங்களில் பேட்டரி மூலம்:பூபதிராஜ்கூறுகையில், "" சூரிய ஒளி தகடை பயன்படுத்தி ( சோலார் பிளேட்) டி.சி., மின்சாரமாக மாற்றி, பேட்டரியில் சேமித்து சைக்கிள் ஓட்டலாம். பேட்டரி தேவை இல்லையென்றால், சூரிய ஒளியை நேரடியாக பயன்படுத்தியும் வாகனம் ஓட்டலாம். இரவு நேரங்களில் பேட்டரி மூலம் குறைந்தது 60 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். இவை இரண்டுமே சாத்தியமில்லை என்றால், "பெடல்' மூலம் நேரடியாக சைக்கிளை இயக்கலாம். பகல் 11 முதல் மாலை 4 மணி வரை பேட்டரி இன்றி சூரிய ஒளி மூலம் வாகனத்தை நேரடியாகவே இயக்க முடியும். ஆனால், வேகம் குறைவாக இருக்கும். சாதாரண சைக்கிளில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம். இதற்கு குறைந்தளவே செலவு செய்தால் போதுமானது, என்றார்.

நன்றி தினமலர் 

திங்கள், 30 ஜனவரி, 2012

கர்நாடக இசை கற்பிக்கும் கல்வி மையங்கள்


நமது இந்திய கலாசாரங்களில் பாரம்பரியம் மிக்க இசையாக கர்நாடக இசை விளங்குகிறது. இந்த இசைக்கு தலையசைக்காதவர்கள் எவரும் இல்லை என்று கூறலாம். முற்காலத்தில் இசைக் கற்க விரும்பியவர்கள் ஆசிரியருடன் தங்கி குருகுலம் பயிற்சியாக தான் இசைக் கற்று வந்தனர். இக்காலக்கட்டத்தில் இசை கற்பதற்கு அதித வாய்ப்புகள் உள்ளது. இசை எல்லோராலும் சுலபமாக கற்றுக் கொள்ள இயலாது, இசைக் கற்க குரல் வளம் மிகவும் முக்கியமானதொன்றாகும். ஒரு சிலர் எவ்வளவு தான் பயிற்சி பெற்றாலும் இனிமையாக பாடுவதென்பது கடினமாகவே உள்ளது. குரல் வளம் உள்ளவர்கள் முறையான பயிற்சி பெறுவதன் மூலம் இசையில் சிறந்து விளங்க முடியும். தற்போது இசை கற்பதற்கென்று ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் முழு நேரப் படிப்பாகவும், மாலை நேர படிப்பாகவும் கற்றுத் தரப்படுகிறது. இன்னும் ஒருபடி முன்னேறி, அஞ்சல் வழிக்கல்வி முறையில் இசை பயிற்சியளிக்கப்படுகிறது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கர்நாடக இசை என்பது வாய்ப்பாடு, வாத்தியங்கள் என இரண்டு வகையாக சொல்லித் தரப்படுகிறது. சில கல்வி நிறுவனங்களில் பரத நாட்டியம், வயலின், மிருதங்கம், வீணை உள்ளிட்ட பல பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இசையில் சான்றிதழ், டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி போன்ற படிப்புகள் உள்ளன. இசைப் படிப்பு வழங்கும் பல்கலைக்கழகங்கள்: சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகம் போன்ற பல்கலையில் இசை பட்டப்படிப்பாக கற்றுத் தரப்படுகிறது. அரசு இசைக் கல்லூரிகள்: சென்னை, மதுரை, கோவை, திருவையாறு போன்ற நகரங்களில் அரசு இசைக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் தேவாரம் கற்றுத் தருவதோடு கர்நாடக மரபிசையில் வாய்ப்பாட்டும் தனியாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சி மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் வாசிப்பு, தவீல், கடம், பரதநாட்டியத்துக்கான நட்டுவாங்கம் மற்றும் நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட அனைத்து வகை பயிற்சிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அரசு இசைப்பள்ளி: தமிழ் நாட்டில் மொத்தம் 22 அரசு இசைப்பள்ளிகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு முழு நேர இசைப் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி முழுவதும் முடிந்த பிறகு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். மாலைநேர பயிற்சி: சென்னை, மதுரை அரசு இசைக் கல்லூரிகளில் இசை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் முறையாக கற்று தரப்படுகிறது. இரண்டு வருடப் படிப்பாகவும் வழங்கப்படுகிறது. இசையில் ஆசிரியர் பயிற்சி: அரசு இசைக்கல்லூரிகளில் ஆசிரியருக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த ஓராண்டு பயிற்சி பள்ளி, கல்லூரிகளில் இசைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சியாகும். இசைக்கான முக்கிய கல்லூரிகள்: 1. ராணி மேரி மகளிர் கல்லூரி, சென்னை இங்கு இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி போன்ற படிப்புகள் படிக்கலாம். 2. தமிழிசைக் கல்லூரி, ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் துவக்கப்பட்டதாகும். இக்கல்லூரியில் சான்றிதழ், இளநிலை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. 3. தஞ்சையிலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பாக வழங்கி வருகிறது. 4. மதுரை சத்குரு சங்கீத வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை வழங்கப்படுகிறது. 5. கலாஷேக்த்ரா - சென்னையில் புகழ்பெற்ற கலைக்கூடமாகும். இங்கு டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பு வழங்குகிறது. 6. எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பாக அளிக்கப்படுகிறது.
நன்றி  தினமலர்  

page

An adventure called CaratLane