வெள்ளி, 25 நவம்பர், 2011

மின் கட்டண மாற்றம்

மின் கட்டண முறைகளில், ஒவ்வொரு பிரிவிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்புதிய கட்டண முறை, ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மின் வாரியம், 53 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறது. இதை சரி செய்ய, மின் கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மின் கட்டண உயர்வு கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. இதில், மின் கட்டண முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன மாற்றம்?இதுகுறித்து, எரிசக்தி துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:செயல்பாட்டில் இருக்கும் கட்டண முறைப்படி, இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்குள் பயன்படுத்துவோர் மற்றும் இரண்டு மாதங்களில், 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோர் என, இரண்டு பிரிவாகவும், ஒன்று முதல் 50 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும், 51 முதல் 100 யூனிட்களுக்கு ஒரு கட்டணமும் இருந்து வந்தது.இதேபோல், ஒவ்வொரு பிரிவிலும், யூனிட்களின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, கட்டண விகிதம் மாறுபாடாக உள்ளது. இக்கட்டண முறை அனைத்தும், தற்போது அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, ஒன்று முதல், 200 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 201 முதல், 500 யூனிட்களுக்கு ஒரு கட்டணம், 501 யூனிட்களுக்கு மேல் ஒரு கட்டணம் என, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விசைத்தறி பிரிவில், 500 யூனிட்கள் வரை இலவசமாகவும், அதற்கு மேல் பயன்படுத்தும் யூனிட்டிற்கு ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், சினிமா ஸ்டூடியோக்கள், படப்பிடிப்பு தளங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே ஆகியவற்றிற்கு, ஒரே விதமான கட்டண முறை அமலுக்கு வரவுள்ளது.இவ்வாறு எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆணையம் மாற்றும்?தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதிய மின் கட்டணத்தில், மேலும் மாற்றம் கொண்டு வர உத்தரவிடும் எனத் தெரிகிறது. ஏனெனில், மின் வாரிய நிறுவனங்களின் இழப்புகளை சரிகட்டும் விதத்தில், மின் கட்டண மாற்றம் இருக்க வேண்டும் என, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல், இந்திய மின்சார சட்டப்படி, மின்சாரம் வழங்குவதற்கு ஆகும் செலவில், 20 சதவீதம் குறைவாகவோ அல்லது 20 சதவீதம் அதிகமாகவோ மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இருப்பதால், தமிழக மின் துறையின் கணக்குகள், மாறுபட வாய்ப்பு உள்ளது.
மக்களிடம் கருத்து கேட்பு…:புதிய மின் கட்டணம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விரைவில் விசாரணை நடத்தி, பொதுமக்கள், தொழிற்சாலை அதிபர்கள், நுகர்வோர் அமைப்புகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கும்.இக்கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் நடக்கும். இதையடுத்து, ஏப்ரல் 1ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
நன்றி-தினமலர்

சனி, 27 ஆகஸ்ட், 2011

இலவசதிருமண தகவல் இணையதளம்

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம் என்ற நிறுவனத்தில் திருமண தகவல் தருவதை இலவசமாக சேவையாக செய்து வருகிறார்கள்.  அனைத்த இனததவரும் அனைத்து மதத்தவரும் வரன் தேடுபவர்கள் அனைவரும் இலவசமாக பதிவு செய்து கெொள்ளலாம்.  இந்நிறுவனத்தின் மூலம் இலவசமாக பதிவு செய்து இலவசமாக கடவுச்செொல் மற்றும் பதிவு எண் பெற்ற பின் தாங்களே இணையதளததின் மூலம் தங்களுக்குத் தேவையான வரன்களை தேர்ந்தெடுத்துக் கெொள்ளலாம்.  அவர்களுக்குத் தேவையான வரன்களன் முகவரி, மற்றும் தெொலைபேசி எண்களைப் பெற ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையத்தை தெொடர்பு கெொண்டு தெரிவித்தால் ஒரு வரனின ஜாதகத்திற்கு பிரிண்ட் அவுட் கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படுகிறது.  மேலும் பதிவு செய்யும் ஜாதகர்கள் தங்களது ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள திருமண சம்பந்தமாக பிரச்சனைகளுக்கு இலவசமாக ஜாதக ஆலேோசனை வழங்கப்படுகிறது.  மேலும் வறுமைக்கேோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமணத்திற்காக இந்நிறுவனத்தின் மூலம் திருமணம் முடிந்தால் வறுமைக்கேட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமண உதவித் தெொகை வழங்கப்படுகிறது.  இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்பவர்கள் தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற வரன்களைத் தேட பெொருத்தம் பார்ப்பது பற்றிய விளக்கங்கள் உள்ளன.  மேலும் இந்நிறுவனத்தில் பதிவு செய்பவர்கள் கமிஷன் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.  அனைத்து செயல்முறைகளும் இலவச சேவையாகவே செய்யப்படுகிறது.  இந்நிறுவனத்தின் மூலம் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் திருமண வரன் தேடி பதிவு செய்து கெொள்ளலாம்.இந்நிறுவனத்தின் முகவரி ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம், அரசு மருத்துவமனை ரோடு, எஸ்,எம்.லக்கி பிளாசா, முதல் மாடி, இராமநாதபுரம் மாவட்டம் - 623 501 அலைபேசி எண் -             9994796522       இணையதளம் முகவரி http://www.kamatchimatrimony.com/

thanks Senthivayal  

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இணைய செய்தி உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்ள

 click
உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கல்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது.
உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது.
முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான்.
ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான்.
வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தேங்க்ஸ் z9tec
 

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சுதந்திர தின நல வாழ்த்தக்கள்


புதன், 10 ஆகஸ்ட், 2011

மறந்து போன இணையங்களை தேடுவதற்கு

"அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே" என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்பும் வசனம்

அதாவ‌து சில தினங்களுக்கு முன் தான் ஒரு இணையதளத்தை பார்த்திருப்போம். அதன் பிறகு அந்த தளம் மீண்டும் நினைவுக்கு வரும் போது அதன் முகவரி மட்டும் கண்ணாமூச்சி காட்டும். எவ்வள‌வே முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.
இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே புக்மார்கிங் சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடி தடுமாறாமல் இருக்க தளங்களை பார்க்கும் போதே புக்மார்கிங் தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான்.
ஆனால் புக்மார்கிங் செய்யப்பட்ட தளங்கள் என்பது பரணில் போடப்பட்ட பொருட்கள் போல ஆகிவிடுவதுண்டு. சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிகூட பார்ப்பதில்லை. தாமதமான நீதி பயனற்றது என்பதை போல பராமரிக்கப்படாத புக்மார்கிங் தளங்களாலும் பயனில்லை.
இந்த சங்கடத்தை தவிர்க்கும் வகையில் புதியதொரு புக்மார்கிங் வசதி அறிமுகமாகியுள்ளது. உண்மையிலேயே புதுமையான புக்மார்கிங் சேவை தான் இது. காரணம் ரீகால் என்னும் அந்த வசதியில் புக்மார்கிங் செய்யாமலேயே புக்மார்கிங் வசதியை பயன்படுத்தலாம்.
அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம். அதெப்படி புக்மார்கிங் செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் ரீகால் இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜய‌ம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.
கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள ரீகாலை ஒருமுறை பொருத்தி கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரை போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்து கொள்ளும்.
வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்க‌ள் அனைத்தையும் சேமித்து கொள்கிற‌து. ஒருவரது இணைய சுவடுகள் முழுவதையும் ரீகால் தனது சேமிப்பில் நிறுத்து வைத்து கொள்கிற‌து.
பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணைய‌தளத்தை தேடி கண்டுபிடித்து தருகிறது. தேடியந்திரத்தில் தேடுவது போலவே நாம் பார்த்ததளம் தொடர்பாக நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்ப‌டுத்தி தேடிக்கொள்ளும் வசதியும் உள்ளது.

thanks z9tech


click



வியாழன், 28 ஜூலை, 2011

வீடியோ விளக்கத்துடன் அசத்தும் இணைய அகராதி

http://www.wordia.com/
 thanks z9tech
வோர்டியாவை மிகவும் சுவாரஸ்யமான இணைய அகராதி என்று வர்ணிக்கலாம். சுவாரஸ்யமானது மட்டும் அல்ல உயிரோட்டமானதும் கூட. அத்துடன் மிகவும் வண்ணமயமானதும் தான்.
வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம். இந்த வீடியோ விளக்கத்தை நீங்களும் சம்ர்பிக்கலாம் என்பது தான் இன்னும் விஷேசமானது.
ஆம் இணையவாசிகள் தங்களை கவர்ந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தை இந்த தளத்தில் சமர்பிக்கலாம். இதை தான் வீடியோ விளக்கம் மூலம் வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பது என்று வோர்டியா பெருமையுடன் குறிப்பிட்டு கொள்கிறது.
இணையவாசிகள் சமர்பிக்கும் வார்த்தை விளக்க வீடியோக்கள் முகப்பு பக்கத்திலேயே அவர்கள் புகைப்படங்களோடு வரிசையாக இடம் பெறுகின்றன. அவற்றில் கிளிக் செய்தால் விளக்கத்தை கேட்கலாம். சமீபத்தில் சமர்பிக்கப்பட்டவை முதலில் இடம் பெறுகின்றன. மற்றவற்றை தேடிப்பார்க்கலாம்.
எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது. அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம். அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால், இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம்.
ஒரே வார்த்தைக்கு பலர் விளக்கம் அளித்திருந்தால் அவை அனைத்துமே இடம் பெறுகின்றன. உறுப்பினர்கள் அவற்றுக்கு வாக்களிக்கலாம். அந்த வாக்குகளின் அடிப்படையில் அவர் வரிசைப்படுத்தப்படும்.
சமீபத்திய வீடியோ, அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்னும் தலைப்புகளிலும் விளக்கங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்கு ஒரு அழகு உண்டு. தனி நபர்கள் குறிப்பிட்ட சொல் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பு பற்றி விளக்கும் போது அந்த அழகை உணர முடியும்.
அதே நேரத்தில் தனிப்பட்ட விளக்கங்களை கேட்கும் போது ஒரு சொல்லின் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ள முடியும். உறுப்பினர் அனுபவம் சார்ந்து அதன் பொருளை விவரிப்பதால் அந்த சொல்லின் பயன்பாடு சார்ந்து அதனை புரிந்து கொள்வதும் சாத்தியமாகும்.
இப்படி வீடியோ விளக்கத்தை இணைப்பதன் முலம் அகராதிகளுக்கே புதிய பரிமாணத்தை வோர்டியா கொண்டு வந்து விடுகிறது.
இணையவாசிகள் சமர்பிக்கும் விளக்கம் தவிர துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கஙக்ளும் சேர்க்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன. விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்சிரீதியிலான அகராதி என்னும் புதிய வகையான அகராதியாக இந்த தளம் உருவாகியிருப்பதாக பாராட்டப்படுகிற‌து.

வெள்ளி, 22 ஜூலை, 2011

பியானோ இசையால் உருவானது தொலைபேசி


thanks dinamalar

வியாழன், 21 ஜூலை, 2011

சிங்கம் சிங்கிளாக வரும்



சிங்கம்  சிங்கிளாக  வரும் என்று கேள்வி பட்டு  இருக்கோம்!
ஆனால் ஒரு மனிதர் முப்பத்தி எட்டு சிங்கங்களுடன்
எத்தனை  தைர்யமாக விளையாடுகிறார் பாருங்கள்.!!!
நிஜம் !!

செவ்வாய், 19 ஜூலை, 2011

கூகிள் டூடில் டுடே

நூற்றி எண்பத்தி ஒன்பதாவது பிறந்தநாள் -
கிரெகோர்   மென்டல்  .ஜெனிடிக்ஸ் ஸ்டடி .
ஸ்டடி ஆப   தி  இன்ஹெரிட் டென்ஸ்...
 Gregor Johann Mendel (July 20, 1822 – January 6, 1884)
thanks Bala Rekha 

Google's Doodle for today (20.07.2011)

திங்கள், 18 ஜூலை, 2011

வணக்கம்: இக்கட சூடுங்க ...

வணக்கம்: இக்கட சூடுங்க ...

ஞாயிறு, 17 ஜூலை, 2011

பிக் பஜாரில் புதுமையான நிகழ்ச்சி

சென்னை : பியூச்சர் குழுமத்தின் ஒரு அங்கமான, "பேஷன் அண்ட் பிக் பஜார்', சென்னை மக்களின் கனவை நனவாக்க, "ஜஸ்ட் டிரை பண்ணுங்க' என்ற தலைப்பில் புதுமையான நிகழ்ச்சி ஒன்றை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், 75 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் ஒன்றை, "பேஷன் அண்ட் பிக் பஜார்' அளிக்கும். இந்த கூப்பனை பயன்படுத்தி, 600 ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது, 75 ரூபாய் தள்ளுபடி பெறலாம். இந்த கூப்பனைக்கொண்டு, புதிய பேஷன் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, போட்டி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கான நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, போட்டிக்கு தகுதி பெறலாம். முதலாவது நிகழ்ச்சி, வரும் 18ம்தேதி, பிக் பஜாரில் நடைபெறும். இதில் பங்கேற்பவர்களின் பொழுதுபோக்கு திறன், குரல் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். தேர்ச்சி பெறும் நபர்கள், 24ம்தேதி நடைபெறும் இறுதி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு, பிரபலங்கள் அடங்கிய நடுவர்களால் தேர்வு செய்யப்படுவர்.

Thanks  Dinamalar.com

புதன், 6 ஜூலை, 2011

இணைய செய்தி உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் இணையத்தை மாற்றம் செய்வதற்கு..

தினமும் இணையதளம் படிக்கும் வாசகர்கள் பல பேர் இருக்கின்றனர். இவர்களில் சில பேர் சில இணையதளங்களின் வண்ணம் சரியாக இல்லையே என்று குறைபடுவதுண்டு.
இனி அந்த கவலை வேண்டாம். நமக்கு பிடித்த இணையதளத்தை நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றி படிக்கலாம். தினமும் பல்லாயிரக்கணக்கான இணையதளங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சில தளங்கள் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.
அதில் இருப்பது போல் வண்ணம் நம் தளத்தில் அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு நொடியில் உருவாக்கி கொண்டு இந்த சேவையை பயன்படுத்தலாம். Enter Url என்பதை சொடுக்கி நாம் வண்ணத்தை மாற்ற விரும்பும் தளத்தின் முகவரியை கொடுத்து Proceed என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் வலது பக்கம் இருக்கும் Hue, Saturation, Lightness,C ontrast, redness, Greenness, Blueness போன்றவற்றில் நமக்கு பிடித்தவாறு கலர் மாற்றம் செய்து Proceed என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் Download Result என்பதை சொடுக்கி எளிதாக தரவிறக்கலாம்.
Thanks ztech
click  here!!


செவ்வாய், 21 ஜூன், 2011

Useful Links

வெள்ளி, 17 ஜூன், 2011

வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ரோபோ


வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் ரோபோ
புதுச்சேரி: புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் "பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயல் இழக்க செய்ய சாதாரண வழிமுறையே பின்பற்றப்படுகிறது. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டு விடுகிறது. வெடிகுண்டுகளை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் பாம் டிடெக்டிவ் ரோபோ மாதிரியை, புதுச்சேரி மிராக்கள் சமுதாய கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியுள்ளனர். ரோபோ செயல்பாடு குறித்து நேற்று லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ., புதுச்சேரி நகராட்சி துணை சேர்மன் ஜான்குமார் முன்னிலையில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பாம் டிடெக்டிவ் ரோபோ ஆர்.எப்., ட்ரான்ஸ்மீட்டர், ஆர்.எப்., ரிசீவர் என இரண்டு முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் ரிமோட் கன்ட்ரோலாகவும், ஆ.எப். ரிசீவர் ரோபோவாகவும் இயங்குகின்றன. ஆர் .எப். ரிசீவர் இரண்டு பேட்டரி, ஒரு ஆர்.எப். கன்ட்ரோல், மனிதர்கள் நடமாட்டத்தை கண்டறியும் யூமன் சென்சார், ஒயர்லெஸ் காமிரா, நிறங்களை கண்டறியும் கலர் சென்சார், வெடிகுண்டுகளை அலாக்காக தூக்கும் ஹேண்டல் கொக்கிகள் என நவீன கருவிகள் தேவைக்கேற்ப இருப்பு பலகையில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை சுழலும் மூன்று சக்கரங்கள் உதவியுடன் தேவைக்கேற்ப நகர்த்த முடியும் என்பது இதன் சிறம்பம்சம். ஆர்.எப். ட்ரான்ஸ்மீட்டர் எழுப்பும் சமிக்கைகள் ஆர்.எப். ரிசீவரை அடைந்து பாம் டிடெக்டிவ் ரோபோவை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோவை ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் அதிகபட்சமாக 25 மீட்டர் தொலைவு வரை நகர்த்த முடியும். இதன் மூலம் 25 மீட்டர் தொலைவில் இருந்தபடி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து பாதுகாப்பாக வெளியேற்றி அழிக்க முடியும்.

இது குறித்து குழு தலைவர் கார்த்திகேயன் கூறுகையில்; பாம் டிடெக்டிங் ரோபோவில் மேலும் சில நவீன கருவிகளை புகுத்தினால் மழை துளிகள், அதிர்வுகளை உணரும் வகையில் கூட தயாரிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள ஒயர்லெஸ் காமிரா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கூட துல்லியமாக காட்டி கொடுத்து விடும். இதனை தேவைக்கேற்ப வீடியோவில் பதிவு செய்து கொள்ளலாம். கலர் சென்சார் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு நிறங்களை கண்டறிந்து சமிக்கை கொடுக்கும். இதற்காக மைக்ரோ கன்ட்ரோல் ஐ.சி., இணைத்து புரோகிராம் செய்துள்ளோம். இதனை சோதனை ஓட்டமாகவும், மாணவர்களுக்கு ரோபோ குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிமுகப் படுத்தியுள்ளோம்.இது செயல்பாட்டிற்கு வந்தால் மனித குலத்திற்கு நன்மை ஏற்படும் என்றார்.
நன்றி  தினமலர்  

ஞாயிறு, 5 ஜூன், 2011

கணணி செய்தி கணணியை முழுவதுமாக தமிழில்



உங்கள் கணணியை  முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு.
உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIPஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும்.
Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
Windows 7இன் எந்த பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை பின்வருமாறு தீர்மானிக்கலாம்: Start பொத்தானைக் கிளிக் செய்த பின் கணணி என்பதில் வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் கணணி குறித்த அடிப்படைத் தகவலை இது காண்பிக்கும்.
அமைப்பு வகைக்கு, அமைப்பு என்ற பிரிவைப் பார்க்கவும். உங்கள் Windows 7 இயக்க முறைமை, 32 பிட் இயக்க முறைமையா அல்லது அது 64 பிட் இயக்க முறைமையா என்பதை இது காட்டும். 32 பிட் பதிப்பை நிறுவ நீங்கள் இவற்றை செய்யலாம்:
குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், பின்னர் LIP -ஐ நிறுவ Open என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது தகவலிறக்கம் என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், கோப்பை உங்கள் கணணிக்கு நகலெடுக்க Save என்பதைக் கிளிக் செய்யவும்.
LIPஐ நிறுவ பதிவிறக்கிய கோப்பிற்கு சென்று அதை இரு முறை கிளிக் செய்யவும். 64 பிட் பதிப்பை நிறுவ மேலே உள்ள இரண்டாவது விருப்பத்தையே நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
இணையதள முகவரிகிளிக் பண்ணுங்க !
தேங்க்ஸ் z9tech

புதன், 25 மே, 2011

மிக சிறிய இன்சுலின் ஊசி

சூர்யா ஜோதிகா புதிய sunrise விளம்பரம்



சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய ஊசி கண்டுபிடிப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தி வரும் இன்சுலின் ஊசியை போட்டுக் கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் ஊசியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் மருந்தை போட்டுக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஊசியின் அளவு 5மில்லி மீட்டர் நீளம் கொண்டவையாகும்.இருப்பினும் பல்வேறு அளவுகளிலும் கிடைத்து வருகிறது. பெக்டான் டிக்கின்சன் அண்டு கம்பெனி தயாரித்துள்ள சிறிய வகை ஊசியின் நீளம் வெறும் 4மில்லி மீட்டர் நீளம் மட்டுமே. இது குறித்து கம்பெனியின் வர்த்தக மேலாளர் திவாகர் மிட்டல் கூறியதாவது: இன்சுலினுக்கான தயாரிக்கப்பட்டுள்ள ஊசி வகைகளில் இவை மிக சிறியவகையாகும். உலகத்திலேயே முதன் முறையாக இந்த சிறியவகை ஊசி பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த விதமான வலியும் ஏற்படாது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை காணமுடியும் என அவர் கூறினார்.
தேங்க்ஸ் தினமலர் 

வெள்ளி, 20 மே, 2011

பூனைகள் செய்யும் யோகா

thanks manithan

மனிதர்கள் யோகாசனம் செய்வதை நாம் அனைவருக்கும் பார்த்திருப்போம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக பூனை யோகாசனம் செய்கிறது. எப்படி இருக்கும் என்று யோசிக்கிறிங்களா இதோ உங்களுக்காக கீழே பூனைகள் யோகா செய்கின்றன. பார்த்து பழகிக் கொள்ளுங்கள்.


















செவ்வாய், 10 மே, 2011

முள்ளங்கி

சிறுநீர்ப் பிரச்சினைகளைப் போக்கும் முள்ளங்கி

சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது.சிவப்பு முள்ளங்கி கொஞ்சம் சுவையாக இருக்கும், அவ்வளவு தான்!
முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை. சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பொஸ்பரசும் இதில் அதிகமாக இருக்குறது தான் அதுக்கு காரணம்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் இருக்காது.
சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம். முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டா வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது.
thanks z9tech

வியாழன், 14 ஏப்ரல், 2011

ராடார் தொழில்நுட்பம்




கையசைத்தால் பேசலாம்: புதிய ராடார் தொழில்நுட்பம் அறிமுகம்

இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியும்.இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர்வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐபோனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி குறுகிய தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. எனவும் எக்ஸ்ரே கருவிக்கு துணைக் கருவியாகப் இதனைப் பயன்படுத்தலாம் எனக் கூறுப்படுகிறது.
எக்ஸ்ரே கருவியுடன் ஒப்பிடும் போது இப்புதிய கண்டுபிடிப்பானது பக்கவிளைவுகளையோ கதிர்கள் கலங்களை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் பாதகமான விளைவுகளைக் கொண்டிருக்காவிட்டாலும் எக்ஸ்ரே படப்பிடிப்பின் போது பெறப்படும் துல்லியமான படங்களை வழங்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போதுள்ள நிலைமையில் ராடர்கள் நீண்ட தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கி சமிக்கைகளை வெளிப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்படுகின்றன. இதன் மூலம் எல்லைக் காவலாளிகள் தமது எல்லைகளுக்குள் அந்நிய கப்பல்கள், விமானங்கள் நுழைகின்றனவா எனக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இப்புதிய வரவான குறுந்தூர ராடரானது இது வரை கடினமாக இருந்த குறுகிய தூரத்தில் ஏற்படும் ஒலி அதிர்வுகளை, சமிக்கைகளை கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதில் உதவலாம் என நம்பப் டுகிறது.
ஒரு ராடர் சமிக்கை ஒளி அலையின் வேகத்துடன் அசைகிறது. அதாவது 300,000 கிலோ மீற்றர் செக்கனுக்கு எனும் வேகத்தில். தற்போதைய தொலை தூர ராடர் மிகச் சரியாக அளக்க கூடிய தூரம் சில சென்ரி மீற்றர்கள், ஆனால் இப்புதிய கண்டு பிடிப்பான குறுந்தூர ராடரானது ஒரு மில்லி மீற்றரைக் கூட துல்லியமாக அளவிடக்கூடியது.
இக் குறுந்தூர ராடர் தனியே மருத்துவ துறையில் மட்டுமல்லாது கட்டிடங்களின் சேதங்கள், கட்டிடங்களை உறுதியாக பேணுவதற்கு உள்ளே வைத்துக் கட்டப்படும் உலோக்கம்பிகள், மின் கடத்தும் வயர்கள் போன்றவற்றைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தலாம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகளைக் கண்டறியவும் இக் குறுந்தூர ராடர் உதவ முடியும்.
இது மட்டுமல்லாது இத் தொழிநுட்பத்தை தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்த முற்படும் போது தற்போது தொடுகை மூலம் இயக்கப்படும் கைத்தொலைபேசிகள் எதிர்காலத்தில் கையை காற்றில் வீசுவதன் மூலம் இயங்கச் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றனவாம்.

thanks z9tech

வியாழன், 7 ஏப்ரல், 2011

கணினியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி

கணினியில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை 
கண்டு ரசிக்க.. விருப்பமான நிகழ்ச்சிகளை  
இலவசமாக நேரடியாக பார்க்கலாம். 

எந்தவொரு வன்பொருளின் துணையும் இல்லாமல் 
உங்கள் கணணியின் மூலமாகவே தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.இதில் நீங்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும்
இலவசம். இதில் நீங்கள் தமிழ் உள்பட உலகின்
பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை  இலவசமாக பார்க்கலாம்.

இந்த மென்பொருளின் அளவானது வெறும் 5 mb தான். இந்த
மென்பொருளின் வழியாக நிகழ்ச்சிகளை பார்க்க கண்டிப்பாக
இணைய இணைப்பு தேவை.தமிழ் channel அனைத்தும் open ஆகும்.
அதில் உங்களுக்கு விருப்பமான channel ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்கலாம்.

இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல
மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக
உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில்
சேமித்து வைத்து கொள்ளலாம்..


தேங்க்ஸ் z9tech

புதன், 6 ஏப்ரல், 2011

வினிகர் பயன்கள்



உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றைவினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும்.

பித்தளைச் சாமான்கள் பளிச்சிட சிறிது வினிகரை உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீருடன் கலந்து அந்தப்பொருட்களின் மேல் அழுத்தித் தேய்க்கவும், ஆனால் எந்தப் பொருளை சுத்தப்படுத்த வினிகரைப் போட்டாலும் அதிக நேரம் ஊறவைக்காது உடனே கழுவி விடுங்கள்.

குளியலறையில் உள்ள மார்பிள் தரையை சுத்தமாக்க ஒரு கப் வினிகரை ஒரு கப் சுடுநீரில் கலந்து கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து சோப்புக் கரைசலைப் பல்துலக்கும் தூரிகையில் நனைத்து தரையைத் தேய்த்தால் மார்பிள் பளபளக்கும்.

எலக்ட்ரிக் கொஃபி மேக்கர் நீண்ட நாட்கள் ஆனதும், உட்புறம் உப்பு படிந்து விடும். இதனால் அடைப்பு ஏற்பட்டு, டிகாஷன் இறங்குவது தாமதமாகும், இதற்கு வினிகர் சிறிது எடுத்து நீருடன் கலந்து ஊற்றி வழக்கம்போல் ஓன் செய்ய வேண்டும், (கொஃபி பவுடன் போடக்கூடாது) வெந்நீர் மட்டும் டிகாஷன் வருவது போல வரும்.இதுபோல இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்தால், பின்பு டிகாஷன் ஸ்பீட் ஆக வரும்.

கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், கார் கண்னாடி இவற்றை வினிகர் கலந்த நீரினால் சுத்தமாகக் கழுவினால் பளபளக்கும்.

பல்செட் வைத்திருப்பவர்கள், அதை இரவில் வினிகர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வாடை இல்லாமல் இருக்கும்.

டைனிங் டேபிளில் சில சமயம் ஒரு துர்வாடை அடிக்கும். வினிகரை நல்ல மிருதுவான துணி அல்லது பஞ்சு கொண்டு துடைத்தால் வாடை போய் புதுசு போல பளபளக்கும்.

உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

ஷம்பூ போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும்வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்.

அரைகப் வினிகர் எடுத்து, குளிக்கும் நீரில் (Warm Water) கலந்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.

Apple  Cider Vinegar என்ற வினிகரை எலுமிச்சை ஜூஸ் அல்லது தேனில் விட்டுத் தண்ணீர் கலந்து குடித்துவரை உடல் எடை குறையும்.

ஒரு தே.கரண்டி வெள்ளை வினிகர், 3 தே.கரண்டி பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான PH சரும டோனர் தயார். முகத்தில் இதைத் த்ளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்.



கறைபோக்கும் வினிகர். வெற்றிலைக் கறை துணியில் பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் போய்விடும்.

அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை நீங்கிப் பளிச்சிடும்.

வாஷ்பேஷனில் தண்ணர் உப்பு படிந்து கறையாக இருந்தால் வினிகருடன் சாக்பௌடர் கலந்து பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின் தேய்த்துக் கழுவவும்.
கொழுப்பைக் குறைக்கும் வினிகர்! வெள்ளரியையும் தக்காளியையும் மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். இக் கலவையில் சிறிது உப்பு போடவும். மல்லி இலைகளை மேலே தூவி விடவும். பின்பு சிறிது வினிகரையும் ஒலிவ் எண்ணெயும் கலக்கவும். பின்பு பரிமாறவும். வேண்டுமானால் சிறிது மிளகு சீரக கலவையையும் இத்துடன் சேர்க்கலாம். வினிகர் கலந்து இந்த சாலுட்டின் ருசி அருமையாக இருக்கும்.
வினிகர் சோப்பதால் உடம்பிலுள்ள கொழும்பு குறைக்கிறது. தவிர Anti inflammation வராமல் தடுக்கிறது. எதுவாயினும் அளவோடு சேர்ப்பது நல்லது. எங்கள் வீட்டில் இதை அடிக்கடி சாப்பிட்டு வருகிறோம்.
சுத்தப்படுத்தும் வினிகர்! குழந்தைகளின், ஃபீடிங் போத்தலை தினசரி கழுவும்போது துளி வினிகர் விட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும்
பிளாஸ்க்கில், சொட்டு வினிகர் விட்டால் போதும் துர்வாடையற்ற பிளாஸ்க் பயன்படுத்த ரெடி.
ஸ்கூலுக்கம், அலுவலகத்துக்கும் கொடுத்தனுப்பும் டிபன் பாக்ஸ்களையும் இப்படி கழுவலாம்!
ஃப்ரிட்ஜில் காய்கறிகளின் வாடை, பால் வாடை, மாவு வீச்சம் என கவலையாக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வினிகர் ஒரு மக் தண்ணீரில் ஃபிரிட் துடையுங்கள்.
உல்லன் துணிகள் பளிச்சிட கையால் பின்னிய உல்லன் துணிகளைத் துவைக்கும் போது 2 டேபிள் ஸ்பூன் வினிகரைத் தண்ணிரில் கலந்தால் துணிகள் பளிச் .. பளிச்தான்.
வெள்ளையுனிஃபார்ம் பளிச்சிட.. குழந்தைகளின் வெள்ளைனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்கு முன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து அதில் துணிகளை முக்கி எடுத்து விட்டுப் பிறகு நீலம் போட்டு அலசுங்கள். துணிகள் தும்பைப் பூவைப் போல் வெண்மையாக இருக்கும்.
ப்ரஷர் குக்கரில் துரு பிடித்து கெட்டியாகி விட்ட ஸ்க்ரூவின் மேல், இரண்டு சொட்டு வினிகர் விட்டு, சற்று நேரம் கழித்துத் திருகினால் சுலபமாலக எடுக்க வரும்.
பித்தளை தட்டு, பாத்திரங்கள் பச்சையாக நிறம் மாறிவிட்டால், வினிகருடன் உப்ப சோத்து, சற்று ஊற வைத்து அழுத்தித் தேய்த்தால் பளிச்தான்.
பூச்சித் தொல்லை வராமல் இருக்க சமையலறையில் உள்ள அலமாரியில் பூச்சிகள் தொல்லை ஏற்படாமலிருக்கு, வினிகர் கலந்த நீரால் துடைக்க வேண்டும் வாரமிருமுறை!
வெண்கரு பிரியாமல் இருக்க …. அவித்த முட்டை தயாரிக்கும் போது முட்டை வேக வைக்கும் தண்ணரீல் சில துளிகள் வினிகர் சோப்பதால் வெண்கரு பிரியாமல் இருக்கும்
பட்டாணி நிறம் மாறமால் இருக்க … பச்சைப்பட்டாணி வேகவைக்கும் போது, அதன் உண்மையான பச்சை நிறம்போகமலிருக்க, நான்கு துளி வினிகர் ஊற்றி வேக வைத்தால் பச்சை நிறத்தை பாதுகாக்கலாம்.
முட்டை நாற்றம் வராமல் இருக்க .. தரையில் முட்டை விழுந்து உடைந்தால் துர்நாற்றம் வீதம் அதைப் போக்க சிட்டிகை அளவு உப்பு, வினிகர் இரண்டும் கலந்து துடைத்துவிட்டால், துரநாற்றம் மறையும்.
மீன் வாடை வராமல் இருக்க … மீன் கழுவும் போது, சிறிதளவு, உப்பு, வினிகர் இரண்டும் சேர்த்து கழுவினால் அந்த மீனின் கெட்ட வாடை நீங்கி விடும். மீனை உடனேயே சமைக்கவில்லை என்றாலும் வினிகர் ஊற்றி நன்றாக மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மீன் இரண்டு நாட்கள் கெடாமலிருக்கும்.
கீரை, காய்கறியை ஃபிரெஷ் ஆக்கணுமா? கீரையோ, காயோ வாடியிருக்கிறதா? அது மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு (அல்லது காய்களின் அளவுக்கேற்ப) வினிகர் ஊற்றி வைத்து விடுங்கள். பதினைந்து நிமிடத்தில் காய், கீரை எதாக இருந்தாலும் சோர்வு நீங்கி மலர்ந்த முகத்தோடு புதியது போல் காட்சி தரும்.
இறைச்சி ஸ்மூத் ஆக… இறைச்சி வகைளை சமைக்கும் போது வினிகர் சிறிது கலந்து ஊறவைத்து பின் சமைத்தால் இறைச்சி மெத்தென்று பஞ்சு போல் வேகும்
பனீர் செய்ய.. பனீர் செய்ய எலுமிச்சை சாறு இல்லாவிட்டால் கொதிக்கும் பாலில் கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கிளறி பனீர் பரிந்ததும் வழக்கம் போல வடிக்கட்டிக் கொள்ளவும்.
வினிகரில் நனைத்துப் பிழிந்த துணியில் சீஸ் கட்டியை சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

page

An adventure called CaratLane