சனி, 28 ஆகஸ்ட், 2010

சங்கடகர சதூர்த்தி


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே


இன்று சங்கடகர சதூர்த்தி!!!

நான் எப்போதும் மாதம் ஒரு முறை வளர் பிறை 

சங்கடகர சதூர்த்தி விரதம் இருப்பது வழக்கம்.

இன்று விரதம் இருக்க நினைத்து இருந்தும் 

வேலை  மும்முரத்தில் சங்கடகர சதூர்த்தி 

என்பதை மறந்து விட்டேன்.பிறகு தான் 

தெரிந்தது ..எதற்காக விரதம்? என்பது 

பற்றி தான் இந்த பதிவு ..

தெரிந்து கொள்வோமா?

விரதத்தின் பலன்கள் :

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட 

நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். 

வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு 

உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை 

அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, 

புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், 

நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய

 முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை 

அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் 

அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் 

நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.


விநாயகர் ஓங்கார வடிவானவர், முப்பத்தி இரண்டு

விதமான வடிவங்களுடன் தோற்றமளிக்கும் விநாயகரின் 

ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு தத்துவங்கள் உள்ளன.

1. பால கணபதி

2. தருண கணபதி

3. பக்தி கணபதி

4. வீர கணபதி

5. சக்தி கணபதி

6. துவிஜ கணபதி

7. சித்தி கணபதி

8. உச்சிஷ்ட கணபதி

9. விக்ன கணபதி

10. க்ஷ‌ிப்ர கணபதி

11. ஏரம்ப கணபதி

12. லட்சுமி கணபதி

13. மகா கணபதி

14. விஜய கணபதி

15. நிறுத்த கணபதி

16. ஊர்த்துவ கணபதி

17. ஏகாட்சர கணபதி

18. வர கணபதி

19. திரயாட்சர கணபதி

20. ‌க்ஷ‌ிப்ரப்ரசாத கணபதி

21. ஹரித்திரா கணபதி

22. ஏகதந்த கணபதி

23. சிருஷ்டி கணபதி

24. உத்தண்ட கணபதி

25. ரணமோசன கணபதி

26. துண்டி கணபதி

27. துவிமுக கணபதி

28. மும்முக கணபதி

29. சிங்கமுக கணபதி

30. யோக கணபதி

31. துர்க்கா கணபதி

32. சங்கடஹர கணபதி








































மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு

நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள

வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை 

வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் 

முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் 

கொள்ள வேண்டும்.விநாயகப் பெருமானுக்கு வெள்ளை

எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர 

சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, 
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்" 

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர்

அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானிக்க வேண்டும் 




.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ரக்ஷா பந்தன் & ஆவணி ஆவிட்டம்

இன்று ரக்ஷா பந்தன் &  ஆவணி ஆவிட்டம்  


    என் இனிய பதிவு உலக சகோதரர்களுக்கு 


அன்பு தங்கையின்  ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் !!

























ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற்
கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது
சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின்
மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின்
முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர்
ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை
நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி
கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன்,
அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.
அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப்
 பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தி
யாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தி
யாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.
தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு
வழக்கில் இருந்து வருகிறது.



கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் 
அலாவுதீன் கில்ஜி தாக்க வரும் போது, ராணி பத்மினி 
அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக்
 குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த 
மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்ப நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது!!



























ஆவணி ஆவிட்டம் 


























































இது
பிராமண சமூகத்தாரால் கொண்டாடப்படும் பண்டிகை வைபோகம் ! 


ஐயர் (அல்லது அய்யர், சாஸ்திரி, சர்மா, பட்டர்) என்றழைக்கப்படுவோர் தமிழ், தெலுங்கு மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். 






தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர்கள், பெரும்பாலும் தமிழகத்தில் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவு கர்நாடகம், ஆந்திரம், கேரளத்திலும் காணப்படுகின்றனர்.







ஐயர் என்ற பெயர் இடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பிராமண சமூகங்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகிய பொழுது உருவாகியது. அவர்களில் இருந்து விலகிய வைஷ்ணவத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போரை ஐயங்கார் என்று அழைக்கிறோம். ஐயர்கள் தங்களின் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உபகுழுக்களாக பிரிந்துள்ளனர். 



















வேதம் கோத்திரம் ஏற்ப பூணூல் வைபோகமாக 

இந்த ஆவணி அவிட்டத்தை சிறப்பாக கொண்டாடுகின்றனர் !!!









ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

டிஸ்கவரி சானெல் நியூஸ் விட்கேட்




















டிஸ்கவரி சானெல் நியூஸ் உங்கள் ப்ளோகில்
லேட்டஸ்ட்டிஸ்கவரி நியூஸ் உங்கள் ப்ளோகில்
அனிமல்ஸ். archeology , பூமி ,ஹுமன் ஹிஸ்ட்ரி ,
space , போன்ற பலவித மான நியூஸ் உங்கள் ப்ளோகில்
தோன்ற இந்த விட்கேடை உங்கள் ப்ளோகில் சேருங்கள்!!
தேங்க்ஸ் http://news.discovery.com

பாடி டாக் குள் அயல்லது சைடு பாரில் சேர்த்து கொள்ளலாம்.
udtgeeth .blogspot .com , இந்த விட்கேடை காணலாம்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ஜாப் விட்கேட் ..





















வேலை தேடி கொண்டு இருபவர்களா?

உங்களுக்கு ஜாப் விட்கேட் வேண்டுமா?

இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி டாக் குள்

பேஸ்ட் பன்ணவும்!! உங்கள் ப்ளோகை

பார்வை இடுபவர்கள் பயன் பெறட்டும்.

------------------------------------------------------------------------------







----------------------------------------------------------------------------------------


__________________________________________________________________________________________

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

பெட்ரோல் இல்லாமல் இயங்கும் கார் ..



















பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் காரில் பயணம் செய்பவர்கள் விலையேற்றம் காரணமாக அதில் பயணம் செய்ய அச்சப்படுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம்.
பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கார் இயங்க தேவையான எரிபொருளை மண்ணில் உள்ள பேக்டீரியாவில் இருந்து எடுக்கப்படும் என்சைம்களை (வேதிப்பொருளை) கொண்டு காற்றின் மூலம் தயாரிக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர். இதற்கு மிகவும் குறைந்த செலவாகும்.
இதன்மூலம் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாது. கார் என்ஜின்களும் பழுது படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
“என்சைம்”களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் “புரோபேன்” மூலக்கூறில் இருந்து 3 கார்பன் அணுக்கள் சங்கிலி தொடர் போன்று உருவாகிறது. இது தொடர்ச்சியாக சங்கிலியாக உருவாகி பெட்ரோல் ஆக மாறுகிறது. இதுவே செயற்கை எரி பொருள் ஆகிறது என கலி போர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்கஸ்ரிப்பே தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

மனசாட்சி உள்ள ரோபோ.!





























குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
உலக அளவில் இன்று முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சிகளில் நானோ தொழில்நுட்பத்துக்கு அடுத்த படியாக ரோபோ ஆராய்ச்சியை குறிப்பிடலாம். இந்த ஆராய்ச்சியில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டின் ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ள அசிமோவ் ரோபோ உலகப் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில் உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ‘ஐசாய் 1’ என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 25 செமீ உயரமும், ஒன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோவுக்கு மனசாட்சியும் இருப்பதாக கார்சியா தெரிவித்துள்ளார்.
வீட்டில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது இந்த ரோபோ. தொழிற்சாலையிலிருந்து சந்தைக்கு வரும் சமயத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த ரோபோக்கள் வீடுகளில் உபயோகப்படுத்தும் போது, இரண்டே மாதத்தில் அந்தந்த வீட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார் இதனை வடிவமைத்த கார்சியா.

page

An adventure called CaratLane