ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இரண்டு தலை பாம்புகளின்



இரண்டு தலை பாம்புகளின் வாழ்க்கை போராட்டம்

இதுவரை நாம் கண்டிராமல் இருந்தாலும் உலகில் அதிகமாக இரண்டுதலையுடன் காணப்படும் விலங்கினம் இரண்டுதலை பாம்புகளே!

இரண்டு தலை இருந்தாலும் உடலிலில் உள்ள மற்ற உறுப்புகள் யாவும் ஒன்றே.

கரு உருவாகும் போதே இரண்டும் தனி தனியாகவே பிறப்பதற்கு முயற்ச்சிக்கும் ஆனால் இரண்டாக பிரிவதற்கு முன்பாகவே பிறந்துவிடும் ஆகவே இரண்டு தலையும் ஒரு உடலும் இருக்கும்.

இரண்டு தலைகளும் ஒரு உடலை பெற்றிருந்தாலும் இரண்டு தலைகளுக்குமே தெரியாது தாங்கள் இரட்டையர்கள் என்று.

உணவு உண்ணும் போது ஏதேனும் ஒரு தலையால் மட்டுமே உண்ணமுடியும், ஆனால் மற்ற தலையின் பசியும் காணமல் போய்விடும் அதனால் உணவு உட்கொள்ளாத தலைக்கு குழப்பம் ஏற்படும். ஆனால் உணவுக்காக வேட்டையாடும் பொழுது இரண்டு தலையும் வேட்டையாடும்.

உணவு உண்ணும் பொழுது மட்டுமல்ல குழப்பம், தான் போகும் பாதையை முடிவு செய்வதில் கூட குழப்பம் ஏற்படும், அதில் எது பலமானதாக இருக்கிறதோ அது மற்ற தலையுடைய பாம்பையும் தன்னுடனே இழுத்து செல்லும்.

எதிரி பாம்புகளை காணும் பொழுது பாம்பின் ஒரு தலை தப்பித்து கொள்ள நினைத்தாலும், மற்ற தலையானது சண்டையிட முயற்ச்சிக்கும், எனவே இறுதியில் மரணமே ஏற்படும். எனவே தான் காடுகளில் இரண்டு தலை பாம்புகளை காண்பது அரிது.

இரண்டுதலை பாம்புகள் சுமார் இருபது வருடம் வரை வாழும் திறனுடையது, அதைபோன்று இரண்டு தலை பாம்புகளின் வலது தலை தான் முடிவுகளை எடுக்கும் திறனுடையது, அதாவது எந்த உணவை உண்பது, எந்த பாதையில் செல்வது போன்ற முடிவுகளை.

நன்றி  z9tech

page

An adventure called CaratLane